வாழ்க யாதவம்
வளர்க சமுதாய ஒற்றுமை
ஓங்குக வீரன் அழகு முத்துக்கோன் யாதவ் புகழ்
திக்கெட்டும் பட்டொளி வீசி பறக்கட்டும் யாதவர் கொடி
அன்பிற்கினிய ஆயர்குல வாக்காள பெருங்குடி மக்களே
சிந்தித்து செயல் பாடவும்
யாதவர் ஓட்டு யாதவர்க்கே என்பதில் உறுதியாக இருக்கவும்
கொள்கை பிடிப்புள்ள யாதவர்களே
திராவிட கட்சிகளுக்கு கொடிபிடித்து
கோசம் போட்டதெல்லாம் போதும்
இந்தியாவிலேயே
ஜாதி வாக்கு அதிகம் வைத்திருக்கும்
பெருமைக்குரிய ஒரே சமுதாயம் யாதவர் சமுதாயம் என்பதை மறந்து விடாதீர்கள் ,தேர்தல் நெருங்கிவிட்டது
முன்னாள் தலைவர்களெல்லாம் யாதவர்களையும்
யாதவர்களின் வாக்குகளையும் தேர்தல் நேரத்தில்
நமக்கே தெரியாமல் அரசியல் வாதிகளிடம் வியாபாரமாக்கி
அவர்களை முன்னிலைபடுத்தி நம்மை பின்னிளைபடுதிவிட்டார்கள்
சாதித்து விட்டதாக ஆளும் கட்சியும்
சாதிக்க போவதாக எதிர்கட்சிகளும்
சாதித்துக்கொண்டதாக துக்கடா கட்சிகளும்
நம்மை தேடிவரும் நேரம் தேர்தல் நேரம் மட்டுமே
ஆண்ட இனம் ஆண்ட இனம் என்று பெருமை பேசியது போதும்
மீண்டும் ஆள ஆட்சியில் பங்கெடுக்க நமக்காக
குரல் கொடுக்கும் ஒரே தலைவன்
ஆயர்குல தலைவன்
டாக்டர் தி தேவநாதன் யாதவ் தலைமையேற்று
அவரின் ஆலோசனைய ஒட்டு மொத்த யாதவர்களின்
ஆலோசனையாக ஏற்று இந்த முறை
ஆயர்குல ஆதரவு இல்லாமல்
ஆட்சியமைக்கமுடியாது
என்ற நிலையை உருவாக்கி
இனிவரும் காலங்களில் யாதவர்களை
அனைத்து கட்சியினரும்
நாட வழி செய்ய வேண்டும்
கொள்கைபிடிப்புள்ள பலமைவதிகளே
உங்களின் கொள்கைகளையும் சமுதாயத்துக்கு பயனில்லா கோட்பாடுகளையும்
இந்தமுறை கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள்
நமது சமுதாய மக்களின் வாழ்வு வளமாக வருங்கால
யாதவ சமுதாய சிற்ப்பிகளின் கனவு நினைவாக
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற
ஒற்றுமையாக ஓரணியில் வாக்களித்து
யாதவர்களின் ஒற்றுமையை உலகுக்கு காட்டிடுங்கள்
யாதவர்கள் என்னத்தை கிழிக்கப்போகிறார்கள் என்று
நினைப்போரின் எண்ணத்தை பொய்யாக்கி இந்தமுறை
நாமும் கிழி கிழிஎன ஆட்சியாளர்களையும் யாதவர்களை உதாசினபடுத்தியவர்களையும் கிலி பிடிக்க வைக்க வேண்டும்
என நானும் நினைத்தேன் என்று சொல்வதைவிட
நானும் முயற்சித்தேன் என்று செயல்பட்டால் லட்சியம்
நிச்சயம் நிறைவேறும் யாதவர்களே
முயற்சிஎன்பது சிலநேரங்களில்
சமுதாயத்துக்கு மாற்றங்களை கொண்டுவரும்
சிலநேரம் என்பது வரும் தேர்தல் நேரத்தில் செயலில் காட்டவும்
மொத்தமாக மாற்றம்மேற்படாட்டலும் ஏதேனும் நல்லது கண்டிப்பாக நிகழும்
இந்திய ஜனநாயக அரசியலில்
பொதுவாக அயிந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான்
தேர்தல் வரும் நாம் போடும் வாக்கு நமக்காகா நாமது நலனுக்காக இருக்க வேண்டும்
இந்தமுறை விட்டு விட்டால் அடுத்த தேர்தல்வரை இருளில் இருக்க வேண்டும
அரசியல் வாதிகளுக்கு பகல் கூடுதல்
வாக்காளர்களுக்கு இரவு கூடுதல்
அதனால்தான் வாக்காளர்கள் தூங்கி விடுகிறோம்
அரசியல் வாதிகள் விழித்துக்கொள்கிறார்கள்
நாமும் அரசியல் வாதியாக வேண்டும்
ஆட்சியில் பங்கெடுக்க வேண்டும் அதனால்
நமது தேசிய தலைவர்
அரசியல் கட்சி ஆரம்பிக்க குரல் கொடுக்க வேண்டும்
ஆதரவு கரம் கொடுக்க வேண்டும்
இல்லையென்றால் தேர்தல் நேரத்தில்
நம் கையில் மையிடும் முன்பு
திராவிட கட்சிக்காரர்கள் மொய் இட்டு விடுவார்கள்
நம்தலைவர் சொல்வதுபோல வாங்குங்கள் தைரியமாக
நமது வரிப்பணம்தான்
வாக்கு
மட்டும் யாதவன் வாக்கு யாதவனுக்கே என்பதை மறவாதீர்
யாதவர்களே தூங்கியது போதும்
தூங்காது விடியலை யாதவர்களுக்கு கொண்டுவர
வாழ்வுரிமை மாநாடு நடத்துகிறார்
வாழ்வுரிமைக்கு குரல் கொடுக்க
வாரீர் வாரீர் வாரீர்
சிங்கார சென்னை நோக்கி
முன்னால் தலைவர்களின் செயல் பாடுகள்
அவர்களின் சுயநலமும் சுய பாதுகாப்பும் மேலோங்கி இருந்தது
அதனால் அந்த வட்டத்திலிருந்து வெளிவராமல் சென்று விட்டார்கள்
தற்பொழுது கண்ணனின் கடைசி அவதாரமாக
வந்துள்ள தலைவர்
சமகாலநிலை ,பிரச்சினைகளை சந்தித்து போராடும் ஆற்றல் உண்டு
நமது தகுதிக்கு தகுந்தவாறு ஆட்சியாளர்களை ஆட்டிபடைக்கும்
ஆளுமைக்கு போராடும் தலைவரின் தலைமையில்
குரல் கொடுப்போமாக
யாதவ சொந்தங்களே புரட்சி புயலாக
புறப்படுங்கள் தேர்தலுக்கு முன் வரும்
இரண்டாவது வாழ்வுரிமை மாநாட்டுக்கு
நமது மாற்றம் பரிணாம வளர்ச்சி
கண்டிப்பாக புரட்சியின் வளர்ச்சியை கொண்டுவரும்
இந்த பரிணாமத்தினை ஒழுங்கு படுத்தி வழிநடத்த
நல்ல தலைவர் கிடைத்துள்ளார்
முயற்சியின் வெற்றி யாதவர்களுக்கு கிடைக்க
ஓன்று பட்டால் வெற்றி உண்டு
சுயநலமில்லாமல் சமுதாய நலனை மனதில் கொண்டு
சிந்தித்து வாக்களிக்க வாழ்வுரிமை மாநாட்டுக்கு
குடும்பத்துடன் வருகை தந்து
யாதவர்களின் சரித்திர நாயகர்களின்
சரித்திரத்தில் இடம் பிடிக்க
முதலில் சென்னை ராயபேட்டை y m c a
திடலில் இடம் பிடிக்கவும்
மாநாடும் யாதவர்களும்
வெற்றிபெற வாழ்த்துகிறேன்
யாதவர்களின் நலனில் அக்கரையுடன்
எஸ் எஸ் சேகர் யாதவ்
கோகுல் நகர் யாதவர் தெரு
பூக்குளம் -முதுகுளத்தூர் -தாலுகா
இராமநாதபுரம் மாவடடம்